1. கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
2
கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
4
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
7
தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
9
கோளில் பொறியில் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
2. வான் சிறப்பு
(மழையின் சிறப்பு)
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிர்தம் என்றுஉணரற்ப் பாற்று.
12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
13
உள்நின்று உடற்றும் பசி.
14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றிக் கால்.
15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
பெய்யாதிருந்து மக்களை கெடுப்பதுவும் மழை, நலிந்தவர்க்குத் துணையாக அவர்தம் வாழ்வில் வளம் சேர்ப்பதுவும் மழையே.
16
விசும்பின் துளி வீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைக்காண்பு அரிது.
17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்.
18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
19
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காது எனின்.
20
நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
3. நீத்தார் பெருமை
(துறவு கொண்டோரின் சிறப்பு)
அதிகாரம்.3 | அறத்துப்பால் | பாயிரம் | குறள்கள்#21-30
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
துறவிகளின் பெருமையை அளவிட்டு எடுத்துக் கூறல், இவ்வுலகில் இறந்தோரை எண்ணிக் கணக்கிடுதல் போன்றது.
23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
நன்மை தீமைகளை ஆராய்ந்து அறிந்த பின், இப்பிறப்பில் துறவு மேற்கொள்வோரின் பெருமையே உலகில் உயர்ந்ததாகப் போற்றப்படும்.
24
உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து.
25
ஐந்து அவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.
ஐம்புலன்களின் ஆசைகளை அடக்கியவனின் ஆற்றலுக்கு வானுலகத் தலைவனாகிய இந்திரனே தக்க சாட்சியாவான்.
26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
செய்வதற்கு அரிதான செயல்களை செய்பவரே பெரியோர்; அவ்வாறு செய்ய இயலாதவர் சிறியோர் ஆவார்.
27
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
சுவை, பார்வை, உணர்ச்சி, ஓசை, மணம் ஆகிய ஐந்தின் வகையான ஐம்புலன்களையும் அறிந்து, அடக்கியாளும் வல்லவனிடத்தில் இவ்வுலகம் வசப்பட்டதாம்.
28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
பயன்மிக்கதான நிறைச் சொற்களை கூறும் துறவிகளின் பெருமையை அவர்களின் அச்சொற்களே உலகுக்குக் காட்டிவிடும்.
29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
நற்குணம் என்னும் மலை மேல் உயர்ந்து நிற்கும் துறவிகளுக்கு கணநேர கோபம் கொள்வது என்பதும் அரிதாகும்.
30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அன்பு செலுத்தும் அறம் கொண்டு வாழ்வோரே அந்தணர் ஆவார்.
முற்றும்
அடுத்த அதிகாரம் - 4 அறன் வலியுறுத்தல்
4. அறன் வலியுறுத்தல்
5.இல்வாழ்க்கை
நல்லாற்றின் நின்ற துணை.
42
இல்வாழ்வான் என்பான் துணை.
43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
44
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
46
47
முயல்வாருள் எல்லாம் தலை.
48
நோற்பாரின் நோன்மை உடைத்து.
49
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.
50
தெய்வத்துள் வைக்கப் படும்.
6.வாழ்க்கைத் துணை நலம்
51
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.
53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?
54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெரின்?
55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
56
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
57
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
58
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
59
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
60
மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கள் பேறு.
7.மக்கட் பேறு
62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
63
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
66
குழலினிது யாழ்இனிது என்பதன் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
67
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
69
ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
70
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
81
இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
82
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
84
அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்?
86
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
87
இனைத்துணைத்து என்பதொன்று இல்லை; விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
88
பரிந்தோம்பி பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
89
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
10.இனியவை கூறல்
92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
93
முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு.
அனைவருக்கும் இன்பம் தரவல்ல, இனிய சொல் பேசி கனிவாய் நட்பு கொள்பவருக்கு வறுமை வருவதில்லை.
95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
97
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
98
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
11.செய்ந்நன்றி அறிதல்
102
காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
104:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
105:
உதவி வரைத்தன்று உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
107:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
துன்பத்தைப் போக்கிட உதவியவரின் நட்புறவை, சான்றோர்கள் தம் எழுப் பிறப்பிலும் நினைவில் வைத்து போற்றுவர்.
108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
பிறர் நமக்குச் செய்த நன்மைகளை மறப்பது அறம் அல்ல; அவர் செய்த தீமைகளை, அப்போதே மறத்தல் நல்லது.
109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்.
110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
12.நடுவு நிலைமை
111
தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
112
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.
நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.
114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
115
கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்
116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.
117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
நடுவுநிலைப் பிறழாது அறநெறியோடு வாழும் ஒருவர், அடையும் வறுமை நிலையை, உலகத்தார் தாழ்வாக எண்ண மாட்டார்கள்.
118
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கூடாமை சான்றோர்க்கு அணி.
119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள்கோட்டம் இன்மை பெறின்.
120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமப்போல் செயின்.
13.அடக்கமுடைமை
122
காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
123
செறிவுஅறிந்து சீர்மைப் பயக்கும் அறிவுஅறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
124
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
125
எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
126
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
127
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
128
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
129
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
130
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
14.ஒழுக்கமுடைமை
அதிகாரம்.14 | அறத்துப்பால் | இல்லறவியல் | குறள்கள் 131-140
131
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
133
ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
134
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
135
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
136
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
139
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
140
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
வலை ஆசிரியர்
- குணா.பா
- தஞ்சாவூர், தமிழ்நாடு, India
- எனக்கான அமைதியையும் மகிழ்வையும் தேடி 60+ வருடங்களான பயணத்தில்...

