அதிகாரம் #90 பெரியாரைப் பிழையாமை
(பெரியோரை அவமதித்து ஒழுகாமை)
பொருட்பால் | அங்கவியல் | குறள்# 891-900
891
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
தாம் மேற்கொண்ட செயலை, வல்லமையோடு செய்து முடிக்கவல்ல பெரியோரது ஆற்றலை இகழாமல் இருந்தால், அது தம்மைக் காக்கும் காவல்கள் யாவிலும் சிறந்ததாகும்.
892
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
893
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
895
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
896
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
897
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்?
898
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
ஆற்றல் மிக்க பெரியோரை மதிக்காமல், ஒருவர் நடப்பாராயின், அவரது, அத்தகு தீய ஒழுக்கத்தின் விளைவாக, அப்பெரியோர்களால் நீங்காத பெருந்துன்பத்தைத் தந்து விடும்.
893
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
தான் கெட வேண்டுமென நினைப்பவர்கள், யாரொருவர் பகையை நினைத்தவிடத்தே அழித்திட வல்லமைப் பெற்றவரோ, அவரிடத்தே யாரிடத்தும் கேளாமற் பிழை செய்தலே போதுமானதாகும்.
894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
எல்லா வகை ஆற்றல்களையும் பெற்றவரிடத்தே, அவ்வகை ஆற்றல் இல்லாத ஒருவர், தாமே முற்பட்டு தீங்கு செய்வதானது தனக்குத் தானே வேண்டி, சாவைக் கைகாட்டி அழைப்பதைப் போன்றதாகும்.
895
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
வலிமை மிக்க அரசினரின் கடுங்கோபத்திற்கு ஆளானவர்கள், அவர்களிடமிருந்து தப்பித்து வேறு எங்கு சென்றாலும், அவர்களால் வாழ்தல் என்பது இயலாததாகும்.
896
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
ஒருவர் தீயினால் சுடப்பட்ட போதிலும் உயிர்ப் பிழைத்திட வாய்ப்பு உண்டாம்; ஆனால், ஆற்றல் மிக்க பெரியோரை அவமதித்து தவறிழைத்தால், தப்பிப் பிழைத்தல் என்பது இயலாததாகும்.
897
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்?
தகுதியாற் சிறப்பு மிக்க பெரியோரது சினத்திற்கு ஆளாகும் ஒருவர், பெருஞ்செல்வமும் பல வகையான சுகபோகங்களும் நிரம்பப் பெற்ற வாழ்க்கையை அனுபவிக்கும் நிலையைப் பெற்றிருந்த போதிலும் அதனால் என்ன பயன்?
898
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
மலை போன்ற பெருமை மிக்க பெரியோரை அவமதித்து, அவரது மதிப்பைக் குலைக்க எண்ணுபவர், இப்பூமியில் நிலைத்த செல்வம் உடையவராகவே இருப்பினும் தம் குடியோடு அழிந்தே போவர்.
899
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
உயர்ந்த கொள்கையுடைய பெரியோர் சினத்தால் வீறு கொண்டெழுந்தார் எனின், ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசரும் கூட இடையிலேயே தனது ஆட்சி நிலைகுலைந்து பதவி இழந்து அழிந்து போவர்.
900
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
மிகவும் சிறப்பு மிக்கதான பரந்த வலிமை உடைய துணைகளைப் பெற்றவராயினும், தகுதியாற் சிறந்த பெருமைகளை உடைய, பெரியோரது சினத்தை எதிர் கொள்ளும் நிலை வந்தால், தப்பிப் பிழைத்தல் என்பது இயலாததாகும்.

