அதிகாரம் #93 கள்ளுண்ணாமை
(மதியைக் கெடுக்கும் மதுவை உண்ணாதிருத்தல்)
பொருட்பால் | அங்கவியல் | குறள்# 921-930
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
மதுவிடத்தே விருப்பம் கொண்டு அதனில் அடிமையானவர்கள், வாழும் காலம் தொட்டும் தன் புகழையும் சிறப்பையும் இழப்பதுடன், அவர்களைக் கண்டு எதிரிகளும் அஞ்ச மாட்டார்கள்.
922
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
மகனின் குற்றங்களைப் பொறுத்தருளும் தாயின் முன்பாக மதுவை அருந்திக் கிடத்தல் என்பதே மிகவும் கொடுமையானது எனும் போது, குற்றங்களைக் கடிந்து கொள்ளும் சான்றோர் முன் மது அருந்துதல் எவ்வாறு மகிழ்ச்சி தருவதாகும்.
924
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
மதுவை அருந்த வேண்டாம்; மதுவை அருந்தியே ஆக வேண்டும் எனில், தாம் சான்றோர்களால் விரும்பி மதிக்கப்பட வேண்டியதில்லை என்போர் மட்டும் அருந்துக.
923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
மகனின் குற்றங்களைப் பொறுத்தருளும் தாயின் முன்பாக மதுவை அருந்திக் கிடத்தல் என்பதே மிகவும் கொடுமையானது எனும் போது, குற்றங்களைக் கடிந்து கொள்ளும் சான்றோர் முன் மது அருந்துதல் எவ்வாறு மகிழ்ச்சி தருவதாகும்.
924
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
மதுவிடத்தே அடிமையாகி அதன் மயக்கத்தில் வீழ்ந்ததன் பெருங்குற்றத்தை தம்முள் கொண்டவரிடத்தே நாணம் என்கிற நற்குணம் இல்லாது போய்விடும்.
925
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
விலை கொடுத்த மதுவை வாங்கி உண்டு, தன் உடலை தன்னிலை மறந்த மயக்க நிலை கொள்ளச் செய்யும் செயல் என்பது அறிவின்மையாகும்.
926
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
அறிவிழந்தவர், உறங்கிக் கிடத்தலும், இறந்து போதலும், வேறு வேறில்லை. அதுபோல், எந்நாளும், மதுவை உண்டு, மதி மயங்கிக் கிடப்பவர்கள், நஞ்சை உண்பாரை ஒத்தவரே அன்றி, வேறில்லை.
927
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
பிறர் அறியாதபடி, மறைந்திருந்து மதுவைக் குடித்த மயக்கத்தின் விளைவால், தம் அறிவையும் தன் நிலையையும் இழந்து கிடப்பவர்கள், அவ் ஊர் வாழ் மக்களால் கண்டறியப்பெற்று, எந்த நாளும் எள்ளி நகையாடப்படுவர்.
928
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
"நான் மதுவைக் குடித்து மயங்கியதே இல்லை" என ஒருவன் பொய் சொல்லுவதை விட்டுவிடல் வேண்டும்; ஏனெனில், அவன் மது அருந்தியவுடன் தன் மனதினுள் மறைத்து வைத்திருக்கும் இரகசியங்கள் அனைத்தும் தாமாக வெளிவந்து விடும்.
929
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
மதுவைக் குடித்து மயக்கத்தில் இருப்பவனிடம் அதைத் தவறென்று அறிவுறுத்தி அவனைத் திருத்த முயற்சிப்பது, நீருக்குள் மூழ்கியவனைத் தேடுவதற்காக தீப்பந்தம் ஏந்திச் செல்வதைப் போன்றதாகும்.
930
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
மது குடிக்காமல் தெளிந்த நிலையில் இருப்பவன், குடித்துவிட்டு, மதி மயங்கிக் கிடப்பவனைப் பார்க்கும்போது, "நாமும் மது குடிக்கும்போது இப்படித்தானே அறிவற்ற நிலையில் இருந்திருப்போம்?" என்பதை உணர்ந்து தன் மானத்தைக் குறித்து எண்ணிப் பார்ப்பார்.

